ஸ்ரீ:
மகரநெடுங்குழைக்காதர் பாமாலையந்தாதி
பாடல் 50
இடைந்தோர் இருப்பிடம் இல்லாது வஞ்சகன் ஏங்கியுள்ளம்
உடைந்தோட நோக்கி எமைக் காத்து அருள் உறு வீடணற்கும்
அடைந்தோம் எனவே அரசு அளித்தாய் அறுகால் அரும்பைக் குடைந்தோகை கூறும் மலர்ப் பொழிற் பேரெயில் கோவிந்தனே.
உன்னைச் சரணமென்று அடைந்த விபீடணற்கு அபயம் தந்து அரசளித்தாய்.அதுபோல் எம்மைச் சிறையிலிட்ட வஞ்சகனான அதிகாரி ஓரிடமின்றி தோற்று ஓட எமைக் காத்து அருள்வாய் என்று வண்டுகள் தேனுண்ணும் சோலைகள் நிறைந்த திருப்பேரைத் தலத்தில் விளங்கும் கோவிந்தா உனைச் சரண் அடைந்தோம்.